Saturday 4th of May 2024 11:39:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
தென்மராட்சி வேம்பிராயில் தேவாலய வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

தென்மராட்சி வேம்பிராயில் தேவாலய வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை வேம்பிராய் பகுதியில் கழிவுகூடத்திற்கான குழி அகழப்பட்டபோது வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வேம்பிராய் சந்திக்கு அண்மித்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற தேவாலயத்திற்கான கழிவுகூடத்திற்கு குழி ஒன்றை அமைப்பதற்காக சீமெந்திலான பெரியஅளவிலான குழாய் புதைக்கும் போது துப்பாக்கிச் சன்னங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் காணப்பட்டிருக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனை அடுத்து சாவகச்சேரி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அந்தப் பகுதியில் அகழ்வினை மேற்கொள்ள கொடிகாமம் பொலிஸார் நடவடிக்கைஎடுத்துவருவதாக தெரியவருகிறது.

கடந்த வாரம் முகமாலையிலும், குரும்பசிட்டியிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE